Tuesday, December 1, 2009

உன்னை பிடிக்கும்

மழையில் நனைய பிடிக்கும்
இசையில் மிதக்க பிடிக்கும்
புத்தகத்தில் மூழ்க பிடிக்கும்
நண்பர்களுடன் அரட்டை பிடிக்கும்
வித விதமாக சமைத்திட பிடிக்கும்
மொட்டை மாடியும் பௌர்ணமி நிலவும் பிடிக்கும்
கடற்கரை மணலில் கை கோர்த்த நடை பிடிக்கும்
ரயிலில் ஜன்னல் ஓர பயணம் பிடிக்கும்
இயற்கையை ரசிக்க பிடிக்கும்

குழந்தையாக
குமரியாக
மாறி மாறி வியந்து நிற்கும்
என்னை
என் ரசனைகளை
மெய்மறந்து ரசிக்கும்
உன்னை
மிக பிடிக்கும்

இப்படி
உன்னை பற்றிய கனவுகளில்
திளைத்து இருக்க பிடிக்கும் …….

பிழை

கல்யாண அழைப்பிதழல்
மனதில் தங்கிய பெயர்
அச்சில் ஏறுவதில்லை
அச்சில் ஏறிய பெயர்
மனதில் தங்குவதில்லை
பிழையின்றி அமைய
அச்சுதிருத்தம் வேண்டும்
வார்த்தைகளுக்கு மட்டுமல்ல
வாழ்கைக்கும்தான்

இயற்கையுடன் தோழமை

சிறகடித்த காலங்களில்
ரசிக்க மறந்த இயற்கை
சிறகொடிந்த தருணத்தில்
நண்பர்கள் ஆகின

தடம் பதித்து சென்ற உறவுகளுக்குகாக
வழி மேல் விழி வைத்து
நாம் காத்திருக்க
நமக்காக காத்திருக்கம் தோழி
நிலா

நினைவு அலைகளில்
மூழ்கும் நம்மை பார்த்து
கண்சிமிட்டி ரசிக்கும் நட்சத்திரங்கள்

பிரிவிலும் துரோகத்திலும்
வறண்டு கிடக்கும் இதயத்தை
சிறிது நனைத்து செல்லும்
மழை துளிகள்

ஆதரவாக அணைத்து கொள்ளும்
தென்றலின் நேச கரங்கள்

விடியலை நோக்கி நீளும்
இந்த தனிமை பயணமும்
ஒரு சுகம் தான்
இவர்கள் உள்ள வரை …………..