சிறகடித்த காலங்களில்
ரசிக்க மறந்த இயற்கை
சிறகொடிந்த தருணத்தில்
நண்பர்கள் ஆகின
தடம் பதித்து சென்ற உறவுகளுக்குகாக
வழி மேல் விழி வைத்து
நாம் காத்திருக்க
நமக்காக காத்திருக்கம் தோழி
நிலா
நினைவு அலைகளில்
மூழ்கும் நம்மை பார்த்து
கண்சிமிட்டி ரசிக்கும் நட்சத்திரங்கள்
பிரிவிலும் துரோகத்திலும்
வறண்டு கிடக்கும் இதயத்தை
சிறிது நனைத்து செல்லும்
மழை துளிகள்
ஆதரவாக அணைத்து கொள்ளும்
தென்றலின் நேச கரங்கள்
விடியலை நோக்கி நீளும்
இந்த தனிமை பயணமும்
ஒரு சுகம் தான்
இவர்கள் உள்ள வரை …………..
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Good one...:-)
ReplyDelete