Tuesday, December 1, 2009

இயற்கையுடன் தோழமை

சிறகடித்த காலங்களில்
ரசிக்க மறந்த இயற்கை
சிறகொடிந்த தருணத்தில்
நண்பர்கள் ஆகின

தடம் பதித்து சென்ற உறவுகளுக்குகாக
வழி மேல் விழி வைத்து
நாம் காத்திருக்க
நமக்காக காத்திருக்கம் தோழி
நிலா

நினைவு அலைகளில்
மூழ்கும் நம்மை பார்த்து
கண்சிமிட்டி ரசிக்கும் நட்சத்திரங்கள்

பிரிவிலும் துரோகத்திலும்
வறண்டு கிடக்கும் இதயத்தை
சிறிது நனைத்து செல்லும்
மழை துளிகள்

ஆதரவாக அணைத்து கொள்ளும்
தென்றலின் நேச கரங்கள்

விடியலை நோக்கி நீளும்
இந்த தனிமை பயணமும்
ஒரு சுகம் தான்
இவர்கள் உள்ள வரை …………..

1 comment: