Tuesday, December 1, 2009

உன்னை பிடிக்கும்

மழையில் நனைய பிடிக்கும்
இசையில் மிதக்க பிடிக்கும்
புத்தகத்தில் மூழ்க பிடிக்கும்
நண்பர்களுடன் அரட்டை பிடிக்கும்
வித விதமாக சமைத்திட பிடிக்கும்
மொட்டை மாடியும் பௌர்ணமி நிலவும் பிடிக்கும்
கடற்கரை மணலில் கை கோர்த்த நடை பிடிக்கும்
ரயிலில் ஜன்னல் ஓர பயணம் பிடிக்கும்
இயற்கையை ரசிக்க பிடிக்கும்

குழந்தையாக
குமரியாக
மாறி மாறி வியந்து நிற்கும்
என்னை
என் ரசனைகளை
மெய்மறந்து ரசிக்கும்
உன்னை
மிக பிடிக்கும்

இப்படி
உன்னை பற்றிய கனவுகளில்
திளைத்து இருக்க பிடிக்கும் …….

பிழை

கல்யாண அழைப்பிதழல்
மனதில் தங்கிய பெயர்
அச்சில் ஏறுவதில்லை
அச்சில் ஏறிய பெயர்
மனதில் தங்குவதில்லை
பிழையின்றி அமைய
அச்சுதிருத்தம் வேண்டும்
வார்த்தைகளுக்கு மட்டுமல்ல
வாழ்கைக்கும்தான்

இயற்கையுடன் தோழமை

சிறகடித்த காலங்களில்
ரசிக்க மறந்த இயற்கை
சிறகொடிந்த தருணத்தில்
நண்பர்கள் ஆகின

தடம் பதித்து சென்ற உறவுகளுக்குகாக
வழி மேல் விழி வைத்து
நாம் காத்திருக்க
நமக்காக காத்திருக்கம் தோழி
நிலா

நினைவு அலைகளில்
மூழ்கும் நம்மை பார்த்து
கண்சிமிட்டி ரசிக்கும் நட்சத்திரங்கள்

பிரிவிலும் துரோகத்திலும்
வறண்டு கிடக்கும் இதயத்தை
சிறிது நனைத்து செல்லும்
மழை துளிகள்

ஆதரவாக அணைத்து கொள்ளும்
தென்றலின் நேச கரங்கள்

விடியலை நோக்கி நீளும்
இந்த தனிமை பயணமும்
ஒரு சுகம் தான்
இவர்கள் உள்ள வரை …………..

Sunday, November 22, 2009

காற்றாடி

ஏழைகளின் கனவுகளுக்கு
மீண்டும் ஒரு தடை
நகர எல்லைக்குள்
இலவசமாக வானில் பறந்திட
அனுமதி இல்லை
காகிதத்தில் கட்டி பறக்கவிட்ட
அவர்களின் இதயங்களுக்கு

விடை தேடும் மனம்

பூக்களின் நறுமணம்
சொல்லி தெரிவதில்லை

இயற்கையின் அழகு
கேட்டு ரசிப்பதில்லை

உறவில் விரிசல்
சொல்லி தெரிவதில்லை

ஆழ்ந்த மௌனத்தின் அர்த்தம்
சொல்லி புரிவதில்லை

காயங்களின் வலி
சொல்லி உணர்வதில்லை

நேசத்தின் பலம்
கேட்டு உணர்வதில்லை

இவை புரிந்தும்
மனம் ஏற்க மறுக்கும்
ஏனோ தெரியவில்லை

விடை தேடி
அலையும் மனம்
ஏனோ புரியவில்லை…………..

காதலின் தொடக்கப்புள்ளி

உறவில் காதல்
மலர்வது எப்போது ?
உணர்வது எப்போது ?

நம்மை நமக்கே
அறிமுகம் செய்து வைக்கும்
தோழமையிலா?

உரிமையோடும் ஆதரவோடும்
காணும் நேசத்திலா ?

கண்ணாடி காட்ட மறந்த அழகை
அந்த கண்களில் காணும் பொழுதா ?

பேச்சுக்களில் உணரும் மென்மையிலா ?
செயல்களில் காணும் கண்ணியத்திலா ?
அருகாமையில் உணரும் பாதுக்காபிலா ?
பார்க்காத பொழுது கொள்ளும் பரிதவிப்பிலா ?
பார்த்தவுடன் கொள்ளும் பரவசத்திலா ?
புரிதலிலும் பகிர்தலிலுமா ?

தொடக்க புள்ளியை
ஆராயும் வேளையில்
உறவுக்கு
சத்தம் இல்லாமல்
முற்றுப்புள்ளி வைத்து செல்கிறது
விதி..........

Wednesday, November 18, 2009

ஹைக்கூ

வறுமையின்
கோர பிடியில் சிக்கி
விற்பனைக்கு வந்து விட்டது
தாய்மையும்....
எஞ்சி இருப்பது
வெறும் உணர்வுகள் மட்டும் தானோ ?
----------------------------------------------------------------
சுடும் என்று தெரிந்தே
தீக்குள் விரலை விட்டேன்
உன்னுடன் ஆன நட்பை போல்
-----------------------------------------------------------
பூக்களுக்கும்
ஜாதி சான்றிதழ் பிறப்பித்தது யார்
'ஜாதி' மல்லி
'துலுக்க' சாமந்தி என்று
--------------------------------------------------------------
அந்நிய தேசத்தவர்கள்
சாதனை படைத்து கொண்டுதான் இருப்பார்கள்
இந்தியர்களின் வாழ்க்கை நிர்ணயம்
பன்னிரண்டு கட்டங்களுக்குள்
அடங்கி இருக்கும் வரை
---------------------------------------------------------------------
இறைவனுக்கு நன்றி
மழலையின் சிரிபிலாவது
அழகு
நிறம்
ஜாதி
மதம்
பார்க்காத
சில நல் இதயங்களை படைத்ததற்கு

Tuesday, November 17, 2009

விளம்பரதாரரின் நம்பிக்கை (நகைச்சுவை) வாசகம்

சென்ற இடம் எல்லாம்
hutch நாயை போல்
துன்பம் பின் தொடர்ந்தாலும்
கவலை இல்லை
முன்னேற்ற பாதை மீது
வெளிச்சம் போட்டு காட்ட
havells லைட் இருக்கும் வரை

பெண்மை

நெற்றியில் திலகம்
கண்ணில் மை
கூந்தலில் மலர்
கையில் வளையல்
காலில் கொலுசு
தினமும்
இவைகளை அணியும் பொழுது
உணர மறந்த பெண்மையை
ஒரு நொடியில்
உன் கூர்விழி பார்வை
உணர்த்தி சென்ற மாயம் என்ன ?

ஒப்பனை

உனக்கான ஒப்பனை
அழகு என்றாய்
அதைவிட அழகு
நீ எனக்கு என்ற கற்பனை

jigsaw puzzle

சில நேரங்களில்
வாழ்கை
ஒரு jigsaw puzzle
பொருத்தமானது கிடைப்பதில்லை
கிடைப்பது பொருந்துவதில்லை

Sunday, November 15, 2009

மழை - 2

அடை மழையும்
பெய்ந்து ஒய்ந்துவிட்டது
ஓயவில்லை
என்னுள் பெய்ந்து கொண்டிருக்கும் பேராவல்
உன்னை காண

மழை - 1

செல்லமாக் அடித்து சென்றது
மழை சாரல் மட்டுமல்ல
உன் நினைவுகளும் தான்

நனைத்து விட்டு சென்றது
தேகத்தை மட்டுமல்ல
உன்னை காணாத தாகத்தையும் தான்

இறைவனின் படைப்பு

மாடி வீட்டு குழந்தை
கண்களில் உறவுக்கான ஏக்கம்
கைகளில் விலை உயர்ந்த பந்து
சாலை ஓர குடிசையில்
இருக்க இடம் இன்றி உறவுகள்
குழந்தையின் கண்களில் பந்து வேண்டி ஏக்கம்



சில வீட்டில்
செல்வ செழிப்புகளில் திளைத்திட
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்க
பல வீட்டில்
பிள்ளைகளே செல்வங்களாக திளைக்கின்றன



பசிக்கு ஒரு வேளை சாப்பிட
பல வேலை செய்திடும் முதியவர்கள் இருக்க
ருசிக்கு பல வேளை சாப்பிட்டு
செரித்திட சிறு வேலை செய்வர் சிலர்



வியப்புக்கும் கேள்விக்கும்
உள்ளாவது
இறைவனா ?
அவன் படைப்பா ?

உறவுகள்

பாலை வன வாழ்க்கையில்
தனிமை பயணம்
சற்று இளைப்பாற
சுமைதாங்கி என்று நினைத்த உறவுகள்
பயணம் தொடரும் என்று அறிவிக்கும்
மைல் கற்கள் ஆகிபோனர்கள்

விழி போடும் புதிர்

கற்ற கல்வி
பெற்ற அனுபவம்
புத்தகங்கள்
மின்வலைகள்
நண்பர்கள்
உறவினர்கள்
எங்கு தேடியும்
விடை கிடைக்கவில்லை
விழியால் நீ போடும் புதிர்க்கு