Friday, July 23, 2010

ஈரமனம்

கூந்தலில்

ஒற்றை ரோஜாவை ரசித்திடும்

நாகரீக மனிதன் நான்

கூந்தலை

கூடை பூக்களில் மறைத்திடும்

கிராமத்து பெண்

என் காதலி

தினமும் வாங்கி வந்தேன்

கூடை நிறைய பூக்கள்

அவளுக்காக இல்லை

எழுபது வயதிலும்

சுட்டெரிக்கும் வெயிலில்

அயராது பூ கட்டி விற்கும்

ஒரு பெண்மணிக்காக

நாகரீக போர்வைக்குள்

இருக்கத்தான் செய்கிறது

ஒரு கிராமத்தானின் இரக்கம் ….


ஆசை விதைகள்

நேற்று என்ற நிழலில்

கருவாக தோன்றி

இன்று என்ற நிஜத்தில்

உருவமாக மாறி

அறுவடைக்கு காத்திருக்கின்றன

ஆசை விதைகள்

நாளை என்ற கனவில்...

Saturday, January 2, 2010

ஓர் அகதியின் (அகத்தின்) குரல்

தினமும் கனவுகளில் உன் வருகை
நிஜத்தில் எப்பொழுது ?

கற்பனைகளில் உன்னுடன் உரையாடல்
நிஜத்தில் எப்பொழுது ?

உறவுகளில் மென்மை
துணைவனின் தோழமை
மழலையின் கால் தடம்
இன்னும் பறந்து விரிகிறது
நிழல் உலகில்
என் எண்ணங்களும் ஏக்கங்களும்

நிஜ உலகிற்கு
அழைத்து வருகிறது
ரணமாகும் பார்வைகளும் பேச்சுகளும்

நாளை நிச்சயம்
கனவு மெய் ஆகும்
என்ற எதிர்பார்ப்பில் உறங்கிடும் மனம்
ஏனோ விடியும் பொழுது
இன்றும் இல்லையா?
என்றுமே இல்லையா?
என்று விடை தேடி அலை பாய்கின்றது

என் உறவுகள் மலர்வது ஏனோ
வெறும் கனவுகளில் மட்டும் தானோ