தினமும் கனவுகளில் உன் வருகை
நிஜத்தில் எப்பொழுது ?
கற்பனைகளில் உன்னுடன் உரையாடல்
நிஜத்தில் எப்பொழுது ?
உறவுகளில் மென்மை
துணைவனின் தோழமை
மழலையின் கால் தடம்
இன்னும் பறந்து விரிகிறது
நிழல் உலகில்
என் எண்ணங்களும் ஏக்கங்களும்
நிஜ உலகிற்கு
அழைத்து வருகிறது
ரணமாகும் பார்வைகளும் பேச்சுகளும்
நாளை நிச்சயம்
கனவு மெய் ஆகும்
என்ற எதிர்பார்ப்பில் உறங்கிடும் மனம்
ஏனோ விடியும் பொழுது
இன்றும் இல்லையா?
என்றுமே இல்லையா?
என்று விடை தேடி அலை பாய்கின்றது
என் உறவுகள் மலர்வது ஏனோ
வெறும் கனவுகளில் மட்டும் தானோ
Saturday, January 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment