Tuesday, December 1, 2009

உன்னை பிடிக்கும்

மழையில் நனைய பிடிக்கும்
இசையில் மிதக்க பிடிக்கும்
புத்தகத்தில் மூழ்க பிடிக்கும்
நண்பர்களுடன் அரட்டை பிடிக்கும்
வித விதமாக சமைத்திட பிடிக்கும்
மொட்டை மாடியும் பௌர்ணமி நிலவும் பிடிக்கும்
கடற்கரை மணலில் கை கோர்த்த நடை பிடிக்கும்
ரயிலில் ஜன்னல் ஓர பயணம் பிடிக்கும்
இயற்கையை ரசிக்க பிடிக்கும்

குழந்தையாக
குமரியாக
மாறி மாறி வியந்து நிற்கும்
என்னை
என் ரசனைகளை
மெய்மறந்து ரசிக்கும்
உன்னை
மிக பிடிக்கும்

இப்படி
உன்னை பற்றிய கனவுகளில்
திளைத்து இருக்க பிடிக்கும் …….

2 comments:

  1. dido... my likes too :-) except mazhalai-il nanaiya romba pedikkum.

    ReplyDelete
  2. Vidya,
    Unga kavithais are really nice... Keep writing more...

    Ennai pol
    ayal naattil
    agathigalaaga vaazhum
    arivaaligalukku :)
    avvappodhu
    aarudhlaaga irukkindrana - ungal
    azhagaana varigal...

    Alavukku athigamaana Nandree!!! ;-)

    ReplyDelete