கூந்தலில்
ஒற்றை ரோஜாவை ரசித்திடும்
நாகரீக மனிதன் நான்
கூந்தலை
கூடை பூக்களில் மறைத்திடும்
கிராமத்து பெண்
என் காதலி
தினமும் வாங்கி வந்தேன்
கூடை நிறைய பூக்கள்
அவளுக்காக இல்லை
எழுபது வயதிலும்
சுட்டெரிக்கும் வெயிலில்
அயராது பூ கட்டி விற்கும்
ஒரு பெண்மணிக்காக
நாகரீக போர்வைக்குள்
இருக்கத்தான் செய்கிறது
ஒரு கிராமத்தானின் இரக்கம் ….