மாடி வீட்டு குழந்தை
கண்களில் உறவுக்கான ஏக்கம்
கைகளில் விலை உயர்ந்த பந்து
சாலை ஓர குடிசையில்
இருக்க இடம் இன்றி உறவுகள்
குழந்தையின் கண்களில் பந்து வேண்டி ஏக்கம்
சில வீட்டில்
செல்வ செழிப்புகளில் திளைத்திட
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்க
பல வீட்டில்
பிள்ளைகளே செல்வங்களாக திளைக்கின்றன
பசிக்கு ஒரு வேளை சாப்பிட
பல வேலை செய்திடும் முதியவர்கள் இருக்க
ருசிக்கு பல வேளை சாப்பிட்டு
செரித்திட சிறு வேலை செய்வர் சிலர்
வியப்புக்கும் கேள்விக்கும்
உள்ளாவது
இறைவனா ?
அவன் படைப்பா ?
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment