பூக்களின் நறுமணம்
சொல்லி தெரிவதில்லை
இயற்கையின் அழகு
கேட்டு ரசிப்பதில்லை
உறவில் விரிசல்
சொல்லி தெரிவதில்லை
ஆழ்ந்த மௌனத்தின் அர்த்தம்
சொல்லி புரிவதில்லை
காயங்களின் வலி
சொல்லி உணர்வதில்லை
நேசத்தின் பலம்
கேட்டு உணர்வதில்லை
இவை புரிந்தும்
மனம் ஏற்க மறுக்கும்
ஏனோ தெரியவில்லை
விடை தேடி
அலையும் மனம்
ஏனோ புரியவில்லை…………..
Sunday, November 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment